புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லிக்கு நிகராக சென்னையில் வாகனங்கள் ஏற்படுத்தும் காற்றுமாசு: ஆய்வில் தகவல்

தில்லியில் ஏற்படும் காற்றுமாசு குறித்து அறிந்து மனதுக்குள் கவலைப்படுவீர்களானால், மற்றொரு செய்தி உங்களை மேலும் கவலைக் கொள்ளச்செய்யலாம். 

News image
Updated On :11 பிப்ரவரி 2020, 6:02 am

DIN


ஆல்வார்: தில்லியில் ஏற்படும் காற்றுமாசு குறித்து அறிந்து மனதுக்குள் கவலைப்படுவீர்களானால், மற்றொரு செய்தி உங்களை மேலும் கவலைக் கொள்ளச்செய்யலாம். 

அதாவது, சென்னையில் இயக்கப்படும் வாகனங்களும் தில்லி அளவுக்கு காற்றுமாசை ஏற்படுத்துகின்றன என்பதுதான் அது.

இந்தியாவில் தில்லிக்கு அடுத்தபடியாக, வாகனங்களால் காற்றுமாசு ஏற்படும் நகரங்களின் பட்டியலில் சென்னைதான் உள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் வாகனங்களால் 3,200 டன்கள் கார்பன் டையாக்ஸைட் (CO2) உற்பத்தியாவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆராய்ச்சி அமைப்பு வௌயிட்ட ஆய்வு முடிவில், கார்பன் டையாக்ஸைட் மட்டுமல்லாமல், சென்னையில் நாள்தோறும் 1000 கிலோ கிராம் அளவுக்கு காற்றில் மாசு கலப்பதாகவும், 12,000 கிலோ கிராம் அளவுக்கு நைட்ரோஜன் டையாக்ஸைட் கலப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.