புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேருக்குத் தொற்று: பாதிப்பு 802 ஆனது

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதித்த 459 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேருக்குத் தொற்று: பாதிப்பு 802 ஆனது
Updated on
1 min read

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதித்த 459 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

புதுச்சேரியில் 60 பேரும், காரைக்காலில் மூன்று பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளன. அதில், 52 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 8 பேர் ஜிப்மரிலும், 3 பேர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், 30 பேர் வெளியேற்றப்பட்டனர் (அரசு மருத்துவக் கல்லூரியில் 20 பேர், ஜிப்மரில் இருந்து 9 பேர் மற்றும் புதுச்சேரிக்கு வெளியே (தமிழ்நாட்டின் வில்லுபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் குணமடைந்துள்ளனர். 

மேலும், புதுச்சேரிக்கு வெளியே நான்கு பேர் (கடலூரில் 2 மற்றும் வில்லுபுரத்தில் 2) உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கரோனா பராமரிப்பு மையங்களில் 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கரோனாவுக்கு 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 331 பேர் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டனர். மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com