

மகாராஷ்டிரத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணைரான நீலா சத்யநாராயண் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவருக்கு வயது(72). கடந்த 1972-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர். பின்னர், பணி ஓய்வுக்குப் பிறகு மாநிலத்தின் கூடுதல் தலைமைத் தேர்தல் செயலாளராக நியமிக்கப்பட்டவர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீலா சத்யநாராயண் மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
ஓய்வுபெற்ற மூத்த அதிகாரியான நீலா சத்யநாராயன் மராத்தியில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.