ஜூலை 16 வரை 1,30,72,718 கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்
நாட்டில் ஜூலை 16-ம் தேதி வரை மொத்தம் 1,30,72,718 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.


புதுதில்லி: நாட்டில் ஜூலை 16-ம் தேதி வரை மொத்தம் 1,30,72,718 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,33,228 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை 16 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் 1,30,72,718க்கும் அதிகமான கரோனா தொற்று சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் அதிகபட்சமாக 34,956 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், 687 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது 3,42,473 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6,35,757 குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 25,602 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், மொத்தம் 10,03,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...