மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குழந்தைகள் காப்பக நிதி: அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை

நாடு முழுவதுமுள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Supreme Court about childcare
Updated On :21 ஜூலை 2020, 9:44 am

DIN

நாடு முழுவதுமுள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 35 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனடிப்படையில், இன்று, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “இணைய வழிக் கல்விக்காக ஒவ்வொரு காப்பகத்துக்கும் ஆண்டுதோறும் 5.5 லட்ச ரூபாய் வீதம் மாநில அரசால் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். 


இதனையடுத்து,  நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கௌரவ் அகர்வால், காப்பத்தின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 100% நிதியை மத்திய அரசே ஒதுக்க வேண்டும் என மாநிலங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நிதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.