பாட்னா: பிகாரில் கடந்த இரண்டு நாள்களில் 1,820 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 33,511 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா பாதித்த 10,519 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 10,120 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் பாதித்த 20,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 66.14 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 49,310 பேர் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் 1,28,7,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.