தில்லி அரசு மருத்துவமனையில் 1,500க்கும் மேற்பட்ட கரோனா படுக்கை வசதிகள்
தலைநகரில் தில்லியில் உள்ள நான்கு அரசு மருத்துவமனையில் 1,500-க்கும் மேற்பட்ட கரோனா படுக்கை வசதிகள் காலியாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Over 1,500 COVID-19 beds available in four govt hospitals in Delhi
தலைநகரில் தில்லியில் உள்ள நான்கு அரசு மருத்துவமனையில் 1,500-க்கும் மேற்பட்ட கரோனா படுக்கை வசதிகள் காலியாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தில்லியில் கரோனா தொற்றுப் பரவல் உச்சத்தைத் தொட்டு தற்போது ஓரளவுக்குக் குறைந்து வருகிறது. முன்னதாக, கரோனா தொற்று அதிகரித்த போது கரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் ஏராளமான நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.
பெரும்பாலான மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டதால் வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமமும் ஏற்பட்ட நிலையில், தற்போது நான்கு அரசு மருத்துவமனைகளில் சுமார் 1,500 படுக்கை வசதிகள் காலியாக உள்ளன.
மேலும், சப்தர்ஜங் மருத்துவமனை, டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் 404 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 1,283 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் சுட்டுகையில் பதிவிட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 1,075 பேருக்கு கரோனா பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,30,606ஐ எட்டியுள்ளன. தில்லியில் இதுவரை 1,14,875 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,827 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...