அசாம் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு
அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

அசாமில் வெள்ளம்

அசாமில் வெள்ளம்
அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வந்த கனமழை காரணமாக பிரம்மபுத்திரா மற்றும் கிளை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், அசாமில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 56,71,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 615 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
கசிரங்கா தேசியப் பூங்காவில் 132க்கும் மேற்பட்ட விலங்குகள் நீரில் மூழ்கியும், வாகனத்தில் அடிபட்டும் பலியாகியுள்ளன.
மேலும், அசாமின் பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள திகிர்பம் பஜாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிராம மக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அசாமின் பல்வேறு மாவட்டங்களில் இந்தாண்டு நான்காவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...