/

புதுவையில் 3 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு: மேலும் நால்வர் பலி

புதுவையில் கரோனா வைரஸ் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

News image

Corona damage exceeds 3,000 in Puducherry

Updated On :28 ஜூலை 2020, 6:45 am


புதுவையில் ஒரே நாளில் 141 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குநர் எஸ். மோகன்குமார் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 824 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 130 பேருக்கும், ஏனாமில் 11 பேருக்கும் என மொத்தம் 141 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 86 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 40 பேர் ஜிப்மரிலும், 4 பேர் கோவைட் கேர் சென்டரிலும், 11 பேர் ஏனாமிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3, 011 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உழந்தைகீரப்பாளையத்தைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலர் பாலன் (67), கதிர்காமத்தைச் சேர்ந்த 54 வயது ஆண், கோரிமேட்டைச் சேர்ந்த 78 வயது ஆண், ஏனா மைச் சேர்ந்த 60 வயது ஆண் ஆகிய நால்வரும் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே 62 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,782 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 36,288 பேரை பரிசோதித்ததில் 32,837 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 240 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.