ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நடிகர் சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

திரைக்கலைஞர் சுசாந்த் சிங்கின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவது கேட்டுக் கொண்டுள்ளார்.

News image

நடிகர் சுசாந்த் தற்கொலை வழக்கில் மாயாவதி கருத்து

Updated On :30 ஜூலை 2020, 6:25 am

திரைக்கலைஞர் சுசாந்த் சிங்கின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவது கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலிவுட் திரை உலகின் பிரபல திரைக்கலைஞர் சுசாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலை திரைத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சுசாந்த் சிங்கின் மரணம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். வியாழன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “பீகார் வம்சாவளியைச் சேர்ந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான வழக்கு ஒவ்வொரு நாளும் வெளிவருகிறது. இப்போது இந்த வழக்கை மகாராஷ்டிரா மற்றும் பீகார் காவல்துறைக்கு பதிலாக சிபிஐ விசாரித்தால் உணமைகள் வெளிவரும்." எனத் தெரிவித்துள்ளார்.

இறந்த நடிகரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் 6 பேருக்கு எதிராக ஜூலை 25 ம் தேதி இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாயாவதி மேலும் கூறுகையில், "சுஷாந்த் ராஜ்புத் சம்பவத்தில் மகாராஷ்டிரா மற்றும் பீகார் காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த மாறுபட்ட நிலைப்பாடு அவர்களின் அரசியல் நலன்களுக்கானது எனத் தெரிகிறது. மகாராஷ்டிரா அரசாங்கம் சுசாந்த் சிங்கின் வழக்கில் தீவிரமாக இருக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.