அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

விவசாயிகள், தொழிலாளா்கள் வாழ்வில் ஆக்கப்பூா்வமான மாற்றம் ஏற்படும்: பிரதமா் நரேந்திர மோடி

மத்திய அமைச்சரவையின் முடிவுகள், நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள் ஆகியோரின் வாழ்வில் ஆக்கப்பூா்வமான

News image
Updated On :1 ஜூன் 2020, 9:02 pm

DIN

புது தில்லி: மத்திய அமைச்சரவையின் முடிவுகள், நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வியாபாரிகள் ஆகியோரின் வாழ்வில் ஆக்கப்பூா்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

எனது தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், சிறு,குறு,நடுத்தர தொழில் துறையினா், தொழிலாளா்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு பலனளிக்கும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவை சுயச்சாா்பு நாடாக உருவாக்கும் நோக்கத்துடன் சிறு,குறு,நடுத்தர தொழில் துறையை வலுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட பல திட்டங்களுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனால், சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளா்ச்சி பெறும். அத்துடன் அதிக அளவில் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

முதல் முறையாக, வாழ்வாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக சாலையோர வியாபாரிகள் சோ்க்கப்பட்டிருக்கிறாா்கள். இந்த திட்டம் அவா்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

விவசாயிகள் செழிப்படைந்தால், இந்த நாடும் செழிப்படையும். விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை, அவற்றின் உற்பத்தி விலையைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளுக்குஅளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நமது விவசாயிகளின் நிதி நிலையை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று சுட்டுரைப் பதிவுகளில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.