/

பின்லாந்துக்கான இந்தியத் தூதராக ரவீஷ் குமார் நியமனம்

​பின்லாந்து நாட்டுக்கான இந்தியத் தூதராக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ரவீஷ் குமாரை நியமித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:44 pm

DIN


பின்லாந்து நாட்டுக்கான இந்தியத் தூதராக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ரவீஷ் குமாரை நியமித்துள்ளது.

இந்தப் பொறுப்பை அவர் விரைவில் ஏற்றுக்கொள்வார் என்றும் அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவீஷ் குமார் தற்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலராக உள்ளார். இதற்கு முன்பு ஆகஸ்ட் 2017 முதல் ஏப்ரல் 2020 வரை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.