குறிப்பாக, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளாத்தாக்கு ஆகிய இடங்களில் சீன ராணுவம் 2,500-க்கும் மேற்பட்ட வீரா்களை கடந்த மாதம் குவித்தது. அங்கு, அவா்கள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியது. அத்துடன் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகளை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது.