கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரோனா அதிகரிப்பால் ராஜஸ்தான் மாநில எல்லைகளுக்கு சீல்!

ராஜஸ்தானில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் புதன்கிழமை அனைத்து மாநில எல்லைகளையும் சீல் வைக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :10 ஜூன் 2020, 8:04 am

PTI

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் புதன்கிழமை அனைத்து மாநில எல்லைகளையும் சீல் வைக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து காவல்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு இயக்குநர் ஜெனரல் எம்.எல். லெதர் அனுப்பிய உத்தரவில்,,

மாநில அதிகாரிகளிடம், 'நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ்' (என்ஓசி) இல்லாமல் எந்தவொரு நபரும் ராஜஸ்தான் எல்லைக்குள் நுழையவோ அல்லது பாஸ் இல்லாமல் வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இது தொடர்பாக அனைத்து காவல் ஆய்வாளர்கள், ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்களுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உடனடியாக மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற அனைத்து ஏற்பாடுகளும் அடுத்த ஏழு நாட்களுக்குள்  செயல்படுத்தப்படும். 

மாநிலங்களுக்கு இடையேயான வழிகள், தவிர ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் அனுமதியுடன் நுழைவு பாஸை பெற்றுக்கொள்ளலாம். மேலும், மருத்துவமனையில் அனுமதிப்பது அல்லது இறப்பது போன்ற அவசரக்கால வழக்குகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். 

ராஜஸ்தான் இதுவரை மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,368 ஆக அதிகரித்துள்ளது, புதன்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 123 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.