அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

கரோனா நெருக்கடியை இந்தியாவுக்கான ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 ஜூன் 2020, 8:33 am

DIN

கரோனா நெருக்கடி நிலையை இந்தியாவுக்கான ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கரோனா வைரஸ் நெருக்கடி நிலையாக ஒரு வாய்ப்பாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். நாட்டின் ஒரு முக்கிய திருப்புமுனையாக 'தன்னம்பிக்கை இந்தியா'வாக இதனை நாம் மாற்ற வேண்டும். 

நாம் உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்த முன்வர வேண்டும். பிற நாடுகளில் இந்திய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். 

கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்திய வர்த்தக சபை பெரும் பங்களிப்பை அளித்தது. குறிப்பாக உற்பத்தித் துறையை ஆதரித்தது. 

மூங்கில் மற்றும் வேளாண் பொருள்கள் உற்பத்தி மூலமாக வடகிழக்கு இந்தியா  ஒரு முக்கிய மையமாக மாறும்.

உலக நாடுகளைப் போல கரோனா வைரஸுடன் இந்தியாவும் போரிடுகிறது. மேலும் பல பிரச்னைகளும் உள்ளன. அனைத்தையும் தைரியத்துடன் எதிர்கொள்வோம்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வலுப்படுத்த இறக்குமதியில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உற்பத்தி, சோலார் பேனல்கள், பேட்டரிகள், சிப் உற்பத்தி மற்றும் விமான போக்குவரத்து ஆகியவற்றில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது' என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.