பத்ரிநாத் கோயிலில் உள்ளூர் கிராம மக்களுக்கு மட்டும் அனுமதி

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் கிராம மக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
பத்ரிநாத் கோயிலில் உள்ளூர் கிராம மக்களுக்கு மட்டும் அனுமதி
Published on
Updated on
1 min read

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர் கிராம மக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கில் வழிபாட்டுத் தலங்களுக்கு ஒருசில கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள சமோலி மாவட்ட நிர்வாகம், அக்கோயிலைச் சுற்றியுள்ள மானா, பாம்னி ஆகிய கிராமங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 

முகக் கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளி பின்பற்றியும் மக்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். 

உத்தரகண்ட் மற்றும் பிற மாநிலத்திலிருந்து மக்களுக்கு ஜூன் 30-ம் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com