அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: அரசு குழந்தைகள் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கரோனா; அதில் 5 பேர் கர்ப்பம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பத்தில் 57 சிறுமிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 5 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

News image
அரசு குழந்தைகள் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கரோனா
Updated On :22 ஜூன் 2020, 7:54 am

PTI


கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இயங்கி வரும் அரசு குழந்தைகள் காப்பத்தில் 57 சிறுமிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 5 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் இல்லாமல் கரோனா பாதிப்பில்லாத மேலும் இரண்டு சிறுமிகளும் கர்ப்பமாக இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் ஐந்து சிறுமிகளும், போக்சோ சட்டத்தின் படி ஆக்ரா, எட்டா, கன்னௌஜ், பிரோஸாபாத், கான்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள குழந்தைகள் நல வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இங்கு அனுப்பப்பட்டவர்கள். இவர்கள் இல்லாமல், மேலும் இரண்டு சிறுமிகளும் கர்ப்பமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை.

இவர்கள் ஏழு பேருமே, அரசு காப்பகத்துக்கு வரும் போதே கர்ப்பமாக இருந்ததாக கான்பூர் மாவட்ட நீதிபதி பிரம்ம தேவ் ராம் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஐந்து சிறுமிகளில் இரண்டு பேர் எல்எல்ஆர் மருத்துவமனையிலும், மற்ற மூன்று சிறுமிகள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.