நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டிக்டாக், இன்ஸ்டாகிராமில் பிரபலமான 16 வயது சிறுமி தற்கொலை

தில்லியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் ஸ்டாரான 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

டிக்டாக் பிரபலம் சியா கக்கர்

Updated On :26 ஜூன் 2020, 3:05 pm IST

தில்லியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் ஸ்டாரான 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியைச் சேர்ந்த சியா கக்கர் டிக்டாக்கில் பிரபலமானவர். டிக்டாக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சுமார் ஒரு லட்சம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். 

இந்நிலையில், புதன்கிழமை இரவு ஷாஹ்தாராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

டி.சி.பி அமித் சர்மா கூறுகையில், 'தற்கொலைக் குறிப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார். 

சிறுமி, புதன்கிழமை மாலை, ஒரு பஞ்சாபி பாடலுக்கு நடனமாடிய ஒரு விடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இவரது மறைவுக்கு டிக்டாக், இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சியா கக்கரின் இன்ஸ்டாகிராம் பக்கம் https://www.instagram.com/siya_kakkar/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.