ஹரியாணாவில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஹரியாணாவில் ரோஹ்தக் பகுதியில் இன்று பிற்பகல் 3.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிக்டர் அளவில் 2.8ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் எந்தவிதமான பொருள் சேதம், உயிா் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. முன்னதாக இதே பகுதியில் கடந்த புதன்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.