தில்லியில் புதிதாக 2,948 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read


தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை தில்லி சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 2,948 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 80,188 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 66 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 2,558 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று 2,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 49,301 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 28,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 19,180. இதுவரை மொத்தம் 4,78,336 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com