அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சீனா குறித்து பேச பிரதமர் பயப்படுகிறார்: நாட்டு மக்களிடையே உரை குறித்து காங்கிரஸ்

மோடி ஆற்றிய உரையில் சீனா பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் காங்கிரஸ், ஏன் சீன ஆக்ரமிப்பு குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2020, 12:43 pm

DIN


நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் சீனா பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் காங்கிரஸ், ஏன் சீன ஆக்ரமிப்பு குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் தொடங்கிய பிறகு ஆறாவது முறையாக இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, கரோனா தொற்று பரவல் காரணமாக வரும் நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் காங்கிரஸ், சீனாவுக்குக் கண்டனம் தெரிவிக்க பிரதமர் மோடி மறந்துவிட்டார். நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றும் போது சீனா குறித்து பேச பயப்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அறிவித்த திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசியும், ஒரு கிலோ கடலைப் பருப்பும் இலவசமாக பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் தனது கருத்தைப் பதிவு செய்கையில், பிரதமர் மோடி இந்த உரையை தவிர்த்திருக்கலாம் என்று யோசனை கூறியுள்ளது.

மேலும், இந்தியாவின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். லடாக்கின் நான்கு பகுதிகளில் சீனப் படை உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. தயவு கூர்ந்து நாட்டு மக்களுக்கு சொல்லுங்கள், சீனப் படையை எவ்வாறு இந்திய நிலப்பரப்பில் இருந்து அகற்றப்போகிறீர்கள்? எப்போது? என்று என ஏற்கனவே காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.