ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

'நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையப்போகிறதா?'

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையப்போகிறதா என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :18 மார்ச் 2020, 3:02 pm

DIN


நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையப்போகிறதா என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது குறித்து குரியன் ஜோசப் தெரிவித்ததாவது,

"நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையப்போகிறதா? அரிதிலும் அரிதான வழக்கில் மற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி அனைத்து வாய்ப்புகளும் முடிவடைந்தது என்றால் மட்டுமே மரண தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என பச்சன் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும். ஒருவேளை தூக்கிலிடப்பட்டால், அந்த குற்றத்தை மக்கள் மறந்துவிடுவார்கள். எனவே, இதன்மூலம் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை சமூகத்திடம் கொண்டுபோய் சேர்க்கலாம்" என்றார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றம் இதுவரை மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டு இறுதியாக நான்காவது முறையாக தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு இவர்கள் நால்வரும் தூக்கிலிடப்படவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.