கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

'நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையப்போகிறதா?'

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையப்போகிறதா என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார்.

Published On :


நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையப்போகிறதா என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது குறித்து குரியன் ஜோசப் தெரிவித்ததாவது,

"நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையப்போகிறதா? அரிதிலும் அரிதான வழக்கில் மற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி அனைத்து வாய்ப்புகளும் முடிவடைந்தது என்றால் மட்டுமே மரண தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என பச்சன் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும். ஒருவேளை தூக்கிலிடப்பட்டால், அந்த குற்றத்தை மக்கள் மறந்துவிடுவார்கள். எனவே, இதன்மூலம் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை சமூகத்திடம் கொண்டுபோய் சேர்க்கலாம்" என்றார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றம் இதுவரை மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டு இறுதியாக நான்காவது முறையாக தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு இவர்கள் நால்வரும் தூக்கிலிடப்படவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.