அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கரோனா பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: உ.பி. அரசின் புதிய சட்டம்

உத்தரப் பிரதேசத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கரோனா பணியாளர்களைத் தாக்கினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 மே 2020, 10:40 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கரோனா பணியாளர்களைத் தாக்கினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் புதிய சட்டம் இயற்றப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று இந்த புதிய அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

அதன்படி, சட்ட வரைவு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கரோனா பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'உ.பி.  தொற்று நோய் கட்டுப்பாட்டு சட்டம் 2020'  என்ற புதிய சட்டம் இயற்றப்படுகிறது. அதன்படி, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கரோனா பணியாளர்களை யாரேனும் தாக்கினால் அவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை  மற்றும் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 

அதேபோன்று கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர், தனிமைப்படுத்தலை மீறினால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். 

இதுதொடர்பாக 'தொற்றுநோய் நோய்கள் சட்டம், 1897' இல் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.