நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீன்வளத்துறைக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மீன்வளத்துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி, ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 மே 2020, 11:46 am

DIN

மீன்வளத்துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி, ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சுய சார்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

மீன்பிடித் தொழில்களை மேம்படுத்த ரூ.11,000 கோடியும், மீன்பிடி துறைமுகம், மீன் விற்பனை, மீன் சந்தைகளை மேம்படுத்த ரூ.9000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடல் மற்றும் மீன்வளம் சார்ந்த அனைத்தும் மேம்படுத்தப்படும். புதிய மீன்பிடி துறைமுகங்கள் கட்டப்படும். 

பிரதமரின் இந்த புதிய மீன்வளத் திட்டத்தால் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 5 ஆண்டுகளில் கூடுதலாக 70 லட்சம் டன் மீன் உற்பத்திக்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.