புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இன்று 11 முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வெளியிடுகிறார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் வெளியிடவிருக்கும் 11 அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பு சார்ந்தவை என்று தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 3 திட்டங்கள், விவசாயத் துறைக்கான அரசின் திட்ட முறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தவையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.