தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரயில் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்

ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் 200 ஏசி அல்லாத ரயில்களுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் முன்பதிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 மே 2020, 5:19 pm

DIN


ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் 200 ஏசி அல்லாத ரயில்களுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் முன்பதிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை 4-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 200 ஏசி அல்லாத பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இதற்கான முன்பதிவு பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இணையதளம் வழியாக மட்டுமே ரயில் முன்பதிவு செய்யப்படும் என்று ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.