விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தில்லியில் ஒரே நாளில் 635 பேருக்கு கரோனா: 14 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு

தில்லியில் ஒரே நாளில் புதிதாக 635 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அங்குப் பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று சுகாதாரத் துறை திங்கள்கிழமை தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :25 மே 2020, 9:17 am

ANI

தில்லியில் ஒரே நாளில் புதிதாக 635 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அங்குப் பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று சுகாதாரத் துறை திங்கள்கிழமை தகவல் தெரிவித்துள்ளது. 

தில்லி சுகாதாரத் துறை அளித்த தினசரி தகவலின்படி, 

கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களில் 7,006 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும், 6,771 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தலைநகர் தில்லியில் கரோனா பாதித்து இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஊரடங்கின் நான்காம் கட்ட தளர்வுகளுக்குப் பிறகு கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.