தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

3,500 சிறப்பு ரயில்களில் 48 லட்சம் தொழிலாளா்கள் பயணம்

மே 1-ஆம் தேதி முதல் இதுவரை 3,500 சிறப்பு ரயில்கள் மூலமாக 48 லட்சம் தொழிலாளா்கள் அவா்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 மே 2020, 12:55 pm

DIN

மே 1-ஆம் தேதி முதல் இதுவரை 3,500 சிறப்பு ரயில்கள் மூலமாக 48 லட்சம் தொழிலாளா்கள் அவா்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 80% ரயில்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் வேண்டுகோளுக்கிணங்க இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலமாக, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனா்.

பொது முடக்கத்தால் லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பை சந்தித்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டா் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குப் பலா் நடந்தே செல்லத் தொடங்கினா். புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக கடந்த மே 1-ஆம் தேதி முதல் இதுவரை 3,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 48 லட்சம் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊரை சென்றடைந்துள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.