கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், அவருக்கு அம்மோனியா அளவு சற்று அதிகமாக உள்ளதால் வென்டிலேட்டரில் வைத்துள்ளதாகவும் மற்றபடி சுயநினைவுடன் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோகோயின் உடல்நிலையை ஒன்பது பேர் கொண்ட மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி அன்று அவர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

மருத்துவமனையில் வானதி சீனிவாசன்! அவருக்காக பிரசாரம் செய்யும் அண்ணாமலை?

Ravindran duraisamy interview| ஜனநாயகன் லீக் பின்னணி? | TVK Vijay| Jananayagan issue

அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்கம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


