ஆமதாபாத்: குஜராத்தில் புதன்கிழமை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகினர், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
குஜராத்தில் பிரானா-பிப்லாஜ் சாலையில் அமைந்துள்ள கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிடங்கு இடிந்து விழுந்ததில் 12 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார்.
காயமடைந்த 12 பேரில், நான்கு பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் 8 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.