தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டிய தேஜஸ்வி யாதவ்

பிகார் தேர்தலில் தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

News image
தேஜஸ்வி யாதவ்
Updated On :12 நவம்பர் 2020, 9:50 am

DIN

பிகார் தேர்தலில் தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தேஜஸ்வி தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களைப் பெற்று மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை பிகார் தேர்தல் முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தேஜஸ்வி யாதவ் தங்களது கூட்டணிக்கு வாக்களித்ததற்காக பிகார் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டிய அவர்,“ மக்களின் ஆதரவு மகா கூட்டணிக்கு இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டது” என்றார்.

மேலும், “2015ஆம் ஆண்டில் மகா கூட்டணி உருவானபோது, ​​மக்களின் ஆதரவு எங்களுடன் இருந்தன. ஆனால் பாஜக அதிகாரத்தைப் பெற பின்வாசல் வழியாக நுழைந்தது.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.