மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 4,550-ஆக அதிகரிப்பு

தில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 4,550-ஆக உயர்ந்துள்ளது.

News image
தில்லி: கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 4,550-ஆக அதிகரிப்பு (கோப்புப்படம்)
Updated On :20 நவம்பர் 2020, 11:26 am

DIN


தில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 4,550-ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக தென்மேற்கு தில்லியில் 743 பகுதிகளும், குறைந்தபட்சமாக வடகிழக்கு தில்லியில் 148 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தில்லி அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 11 மாவட்டங்கள்  உள்ள நிலையில், அதில் 6 மாவட்டங்களில் 400க்கும் அதிகமான கட்டுப்பாட்டு மண்டலங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு தில்லியில் 743 பகுதிகளும், தெற்கு தில்லியில் 705, மேற்கு தில்லியில் 587, தென்கிழக்கு தில்லியில் 543, மத்திய தில்லியில் 490, வடமேற்கு தில்லியில் 445 பகுதிகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தில்லியில் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் 5 கரோனா தொற்று அதிகரித்து, நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக நவம்பர் 11-ஆம் தேதி 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை (அக்.18) கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதிகபட்சமாக 131 பேர் உயிரிழந்தனர். 

நேற்று (வியாழக்கிழமை) ஒரு நாளில் மட்டும் 7,546 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 5.1 லட்சமாக அதிகரித்துள்ளது. புதிதாக 98 பேர் பலியானதால் மொத்த உயிரிழப்பு 8,041-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.