‘ம.பி.யில் மீண்டும் பொதுமுடக்கமா?’: முதல்வர் சிவராஜ்சிங் செளகான் விளக்கம்

மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தும் திட்டம் இல்லை என மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தும் திட்டம் இல்லை என மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுநோய் மத்தியில் மீண்டும் பொதுமுடக்கம் அமலாவதாக வெளியான தகவலை மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நிராகரித்தார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை பேசிய அவர்,“மத்தியப்பிரதேசத்தில் பொதுமுடக்கம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் இதுவரை மொத்தம் 1,88,018 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com