கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பஞ்சாப்: 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்

பஞ்சாபில் நவம்பர் 23-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

News image

பஞ்சாப்: 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ் (கோப்புப்படம்)

Updated On :21 நவம்பர் 2020, 11:23 am

DIN

பஞ்சாபில் நவம்பர் 23-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநில விவசயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வரும் பாரத் கிசான் யூனியன், உள்ளிட்ட விவசாய அமைப்புகளுக்கு பேச்சுவார்த்தைக்காக முதல்வர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி சண்டிகரில் உள்ள கிசான் பவனில் இன்று (சனிக்கிழமை) விவசாய சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து நவம்பர் 23-ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் பேசிய முதல்வர் அமரீந்தர் சிங்,  ''நவம்பர் 23ஆம் தேதி இரவு முதல் 15 நாள்களுக்கு ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை நான் வரவேற்கிறேன். மாநிலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு இதன் மூலம் சரிசெய்யப்படும். மத்திய அரசு உடனடியாக பஞ்சாபில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பேசிய பாரத் கிசான் யூனியன் அமைப்பினர், ''வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு 15 நாள்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்'' என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.