

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல், தீவிர புயலாக மாறியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை புயலாக உருவெடுத்து, இரவில் தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இரவு 11.30 மணி நிலவரப்படி, கடலூருக்கு 310 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 380 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ள இந்த தீவிர புயலானது கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி, 6 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதி, குறிப்பாக புதுச்சேரி அருகில் புதன்கிழமை மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 155 கி.மீ வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் புயல் கரையை கடக்கும் போது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஆதித கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாவட்ட நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

சாலை வசதி கோரி மறியல்

புன்னை வாகனத்தில் பெருமாள்

லண்டனிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட விமானம் எகிப்தில் தரையிறக்கம்!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

