லண்டனிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட விமானம் எகிப்தில் தரையிறக்கம்!
லண்டனிலிருந்து மும்பைக்கு இன்று(மார்ச் 9) புறப்பட்ட விமானம் ஒன்று, எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.


லண்டனிலிருந்து மும்பைக்கு இன்று(மார்ச் 9) புறப்பட்ட விமானம் ஒன்று, எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளால், மேற்காசிய பிராந்தியத்தில் வான் வெளியைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
இந்நிலையில், ஹீட்த்ரோ விமான நிலையத்திலிருந்து இன்று(மார்ச் 9) இண்டிகோ விமானம் (6இ 002) 300 பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டது. இந்திய நேரப்படி, இன்று(மார்ச் 9) அதிகாலை 3.03 மணிக்கு லண்டனிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் மேற்காசிய பிராந்தியத்தில் விதிக்கப்பட்ட திடீர் வான் வெளி கட்டுப்பாடுகளால் கெய்ரோவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அந்த விமானம் செவ்வாய்க்கிழமை(மார்ச் 10) மும்பைக்குத் திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள விமான நிறுவனம் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்பட ஹோட்டல்களில் தங்கும் வசதி என அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...