தெலங்கானாவில் இன்றைய கரோனா பாதிப்பு 862
தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Telangana reports 862 new COVID-19 cases, 3 deaths

Telangana reports 862 new COVID-19 cases, 3 deaths
தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 862 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,66,904 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 3 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,444ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2,54,676 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 95.41 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் 41,101 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...