
உத்தரப் பிரதேசத்தில் லாரி மீது டிராக்டர் டிராலி மோதிய விபத்தில் 24 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேர் பலத்த காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
ஏக்னௌரா கிராமத்தைச் சேர்ந்த தையிகாட் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திகை பூர்ணிமாவையொட்டி கங்னை நதியில் நீராடுவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது உபாரியா கோயிலின் அருகே இந்த விபத்து ஏற்பட்டதாகக் காவல் ஆய்வாளர் எஸ்.ஆனந்த் தெரிவித்தார்.
பல பயணிகள் வாகனத்தின் கீழ் சிக்கியிருந்தனர். காவல்துறை குழுவினர் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.