ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும்'

காங்கிரஸ்  கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும் குப்பையில் கிழித்து வீசப்படும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image
பஞ்சாப் போராட்டத்தில் விவசாயிகள் மத்தியில் பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி
Updated On :4 அக்டோபர் 2020, 11:22 am

DIN

காங்கிரஸ்  கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும் குப்பையில் கிழித்து வீசப்படும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துகொண்டு டிராக்டர் பேரணியை தொடக்கி வைத்தார்.

முதற்கட்டமாக பாத்னி கலான் பகுதி முதல் ஜாத்பூர் வரை டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதற்கு ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.

பின்னர் விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், ''வேளாண் மசோதாக்களால் பிரச்னை இல்லை என்றால், விவசாயிகள் எதற்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்'' என்று கேள்வி எழுப்பினார். 

''கரோனா பெருந்தொற்று பரவிவரும் சூழலில் வேளாண் மசோதாக்கள் அவசர அவசரமாக சட்டமாக நிறைவேற்றப்பட்டது ஏன்?. விவசாயிகள் நலனுக்காக வேளாண் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது என்றால் அது குறித்து ஏன் விரிவான விவாதம் நடத்தப்படவில்லை'' என்று கேள்வி எழுப்பினார்.

''ஹாத்ரஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்டவகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்'' என்று ராகுல்காந்தி வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.