அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஹாத்ரஸ்: சிறப்பு விசாரணைக் குழுவிற்கு மேலும் 10 நாள்கள் அவகாசம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்காலத்தை மேலும் 10 நாள்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நீட்டித்துள்ளார்.

News image
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)
Updated On :7 அக்டோபர் 2020, 6:02 am

DIN

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்காலத்தை மேலும் 10 நாள்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நீட்டித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம்  ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 நபர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இதில், இளம்பெண்ணின் உடலை அவர்களது பெற்றோர்களின் முழு அனுமதியையும் மீறி காவல்துறையினரே அவசரமாக அவசரமாக எரித்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கூட்டுப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவினை அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் ஹாத்ரஸ் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியிலும் சிறப்பு விசாரணைக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ஏழு நாள்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக் காலத்தை மேலும் 10 நாள்களுக்கு நீட்டித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.