அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: மர்ம நபர்களால் இளம் விவசாயி சுட்டுக் கொலை

உத்தரப்பிரதேசத்தில் சொந்த நிலத்தில் இளம் விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 அக்டோபர் 2020, 10:05 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் சொந்த நிலத்தில் இளம் விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஜ் மாவட்டத்திலுள்ள தாசிப்பூர் கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய சந்திர கிஷோர் ராஜ்புட் என்பவர் தமது சொந்த நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார்.  

அப்போது மர்ம நபர்கள் சிலரால் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அப்பகுதியை சேர்ந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாயியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கூட காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை.

இதனிடையே உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தை கன்னுஜ் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி., சுப்ரத் பாதக் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.  

23 வயதுடைய இளம் விவசாயி சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.