மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆந்திரத்துக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது

விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்காக நகர்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஆந்திர கடற்கரைக்கு அருகே காக்கிநாடாவில் கரையைக் கடந்தது.

News image
ஆந்திரத்துக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது
Updated On :13 அக்டோபர் 2020, 7:01 am

ANI


விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்காக நகர்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஆந்திர கடற்கரைக்கு அருகே காக்கிநாடாவில் கரையைக் கடந்தது.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடைசி 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு அருகே கரையை கடந்தது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு கரையை கடந்த போது மணிக்கு 55 கிமீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது, ஆந்திர மாநில கடற்கரையை ஒட்டிய பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்தது. தெற்கு ஒடிசா மற்றும் தெலங்கானாவிலும் மிதமான மழை பெய்தது.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, அக்டோபா் 14 ஆம் தேதி வரை குமரி கடல், மன்னாா் வளைகுடா, அந்தமான் கடல், தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடல் பகுதிகளில் மணிக்கு சுமாா் 50 முதல் 60 கி.மீ. வேகத்துடன் சூறாவளி வீசக்கூடும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.