அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: கடந்த 28 நாள்களில் 47% கரோனா பரவல் குறைவு

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 28 நாள்களில் 47 சதவிகிதம் கரோனா பரவல் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
உ.பி.: கடந்த 28 நாள்களில் 47% கரோனா பரவல் குறைவு (கோப்புப்படம்)
Updated On :15 அக்டோபர் 2020, 11:39 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 28 நாள்களில் 47 சதவிகிதம் கரோனா பரவல் குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

எனினும் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இம்மாதம் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் 2,672 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 36 பேர் உயிரிழந்தனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 36,295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,04,545 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  இதனால் குணமடைவோர் விகிதம் 90.42 சதவிகிதமாக உள்ளது.

கரோனாவால் இதுவரை 6,543 பேர் உயிரிழந்தனர். இதுவரை 4,17,383 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.25 கோடி கரோனா பரிசோதனைகளை செய்த ஒரே மாநிலம் உத்தரப்பிரதேசம் என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஒரு கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 15 நாள்களில் 25 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ([புதன்கிழமை) மட்டும் 1.51 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.