அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: மீண்டும் பட்டியலினப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

ஹாத்ரஸ் வன்கொடுமையைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பட்டியலினத்தை சேர்ந்த மற்றொரு இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :15 அக்டோபர் 2020, 9:14 am

DIN

ஹாத்ரஸ் வன்கொடுமையைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பட்டியலினத்தை சேர்ந்த மற்றொரு இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள மெளராணிபூர் பகுதியை சேர்ந்த 21 வயது பட்டியலினப் பெண்ணிடம் நரேந்திர சாஹு மற்றும் சஷாம் சிரோதியா ஆகியோர் அத்துமீறலில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், இளம்பெண்ணின் கிராமத்தை சேர்ந்த நபர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது பள்ளி மேலாளருடன் இணைந்து பெணணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் பதிவாகியுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், இருவர் மீதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.