கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெருநிறுவனங்களிடமிருந்து பெருந்தொகையை நன்கொடையாகப் பெற்ற பாஜக

கடந்த 2018 - 19 ஆம் நிதியாண்டில் மட்டும் பல்வேறு பெருநிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் ரூ.876.10 கோடியை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடையாக வாரி வழங்கியுள்ளன.

News image

பெருநிறுவனங்களிடமிருந்து பெருந்தொகையை நன்கொடையாகப் பெற்ற பாஜக

Updated On :16 அக்டோபர் 2020, 6:16 am

ENS

புது தில்லி: கடந்த 2018 - 19 ஆம் நிதியாண்டில் மட்டும் பல்வேறு பெருநிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் ரூ.876.10 கோடியை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடையாக வாரி வழங்கியுள்ளன.

அதில் ஒரு பெரும் தொகையை அதாவது 1573 பெரு நிறுவனங்களிடம் இருந்து ரூ.698.082 கோடியை நாட்டை ஆளும் கட்சியான பாஜக பெற்றுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸ், 122 பெருநிறுவனங்களிடமிருந்து ரூ.122.5 கோடியை நன்கொடையாகப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.  

இதற்கு அடுத்த இடத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 17 பெருநிறுவனங்களிடமிருந்து ரூ.11.345 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

2018 - 19ஆம் நிதியாண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போதுதான் பெரு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் அதிகளவில் நன்கொடையைப் பெற்றுள்ளன. இதற்கு முன்பு 16வது மக்களவைக்கு தேர்தல் நடைபெற்ற 2014 - 15-ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் ரூ.573.18 கோடியை நன்கொடையாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2018 - 19-ஆம் ஆண்டில்  பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு டாடா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளைதான் அதிக நன்கொடையை அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை, நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகள் மூன்றுக்கும் ஒரே ஆண்டில் நன்கொடை அளித்த மொத்த மதிப்பு ரூ.455.15 கோடியாகும்.

இதில், பாஜகவுக்கு ரூ.356.535 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.55,629 கோடியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.42.986 கோடியும் வழங்கப்பட்டுள்ளன. 

இதில், ஐந்து முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையில் ரூ.20.54 கோடி அளவுக்கு எந்த பதிவும் செய்யப்படாத, இணையத்தில் விவரங்கள் கூட கிடைக்காத, அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை என்வென்று கூட அறியாத நிறுவனங்களின் பெயர்களில் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.