புது தில்லி: கடந்த 2018 - 19 ஆம் நிதியாண்டில் மட்டும் பல்வேறு பெருநிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் ரூ.876.10 கோடியை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடையாக வாரி வழங்கியுள்ளன.
அதில் ஒரு பெரும் தொகையை அதாவது 1573 பெரு நிறுவனங்களிடம் இருந்து ரூ.698.082 கோடியை நாட்டை ஆளும் கட்சியான பாஜக பெற்றுள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸ், 122 பெருநிறுவனங்களிடமிருந்து ரூ.122.5 கோடியை நன்கொடையாகப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 17 பெருநிறுவனங்களிடமிருந்து ரூ.11.345 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
2018 - 19ஆம் நிதியாண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போதுதான் பெரு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் அதிகளவில் நன்கொடையைப் பெற்றுள்ளன. இதற்கு முன்பு 16வது மக்களவைக்கு தேர்தல் நடைபெற்ற 2014 - 15-ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் ரூ.573.18 கோடியை நன்கொடையாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
2018 - 19-ஆம் ஆண்டில் பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு டாடா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளைதான் அதிக நன்கொடையை அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை, நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகள் மூன்றுக்கும் ஒரே ஆண்டில் நன்கொடை அளித்த மொத்த மதிப்பு ரூ.455.15 கோடியாகும்.
இதில், பாஜகவுக்கு ரூ.356.535 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.55,629 கோடியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.42.986 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.
இதில், ஐந்து முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையில் ரூ.20.54 கோடி அளவுக்கு எந்த பதிவும் செய்யப்படாத, இணையத்தில் விவரங்கள் கூட கிடைக்காத, அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை என்வென்று கூட அறியாத நிறுவனங்களின் பெயர்களில் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தற்காலிக நிழற்கூரை அமைக்கும் பணி தொடக்கம்

செய்யாற்றில் கற்கால கருவிகள், பொருள்கள் கண்டெடுப்பு

அரசு மருத்துவமனையில் சலவை இயந்திரத்தில் தீ விபத்து

ராணிப்பேட்டை: கால்நடை மருந்தகங்களில் அமைச்சா் கமலி ஆய்வு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



