அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

'விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்'

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் நலம் மற்றும் விவசயத்துறையின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News image
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப் படம்)
Updated On :16 அக்டோபர் 2020, 10:22 am

DIN

லக்னெள: உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் நலம் மற்றும் விவசயத்துறையின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - சர்வதேச உணவு மற்றும் விவசாய வாரத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், ''கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், இடையூறு இல்லாமல் பயிர்கொள்முதல் செய்வதை அரசு உறுதிசெய்யும் என்று கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி 100 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.  


ஊரடங்கில் கோதுமைப் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளதால், 6000 கோதுமை கொள்முதல் நிலையங்கள் கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் 36 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாய விளைப்பொருள்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் 5000 கிடங்குகளைக் கட்ட உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது'' என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.