ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆந்திரத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட முதல்வர் ஜெகன்மோகன்

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஜெகன்மோகன் வான்வழியாக திங்கள்கிழமை பார்வையிட்டார்.

News image

வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்

Updated On :20 அக்டோபர் 2020, 5:54 am

DIN

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஜெகன்மோகன் வான்வழியாக திங்கள்கிழமை பார்வையிட்டார்.

கடந்த சில தினங்களாக ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடகம் ஆகியப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக முதல்வர் ஜெகன்மோகன் பார்வையிட்டார். கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்ட அவர் நிவாரண உதவிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஜெகன்மோகன் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் இழப்புகளை உடனடியாகக் மதிப்பிட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்க உத்தரவிட்டார்.

முதல்வர் ஜெகன்மோகனுடன் உள்துறை அமைச்சர் மெகதோதி சுச்சரிதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.