மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,142 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,142 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,142 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மாநிலத்தில் புதிதாக 8,142 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,17,658 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 180 பேர் பலியாகியுள்ளனர், 23,317 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 42,633 பேர் பலியாகியுள்ளனர், 14,15,679 பேர் குணமடைந்துள்ளனர். 1,58,852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,609 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,45,871 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 9,869 பேர் பலியாகியுள்ளனர், 2,15,269 பேர் குணமடைந்துள்ளனர். 19,245 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் வெறும் 4 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,443 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 2,993 பேர் ஏற்கெனவே குணமடைந்துவிட்டனர். 143 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com