தெலங்கானா வெள்ளம்: ரூ.1.5 கோடி நிதியுதவி அறிவித்த நடிகர் பிரபாஸ்

தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.1.5 கோடி வழங்குவதாக நடிகர் பிரபாஸ் அறிவித்துள்ளார்.
நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ்

தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.1.5 கோடி வழங்குவதாக நடிகர் பிரபாஸ் அறிவித்துள்ளார். 

கடந்த வாரம் ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை கொட்டி தீா்த்தது.இதனால் பல இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாயினா். மேலும், மழை காரணமாக ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது.

தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் திங்கள்கிழமை தெரிவித்தார். 

இந்நிலையில் வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் தெலங்கானா மாநில மக்களுக்கு திரை உலகினர் பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 1.5 கோடி வழங்குவதாகப் பிரபல நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அவர் குரறிப்பிட்டுள்ளார். முன்னதாக நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி ஆகியோர் ரூ.1 கோடியும், நடிகர்கள் நாகார்ஜூனா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com