4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

நாட்டில் புதிதாக 75,809 பேருக்கு கரோனா; 1,133 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,133 பேர் உயிரிழந்தனர்.

News image

நாட்டில் புதிதாக 75,809 பேருக்கு கரோனா; 1,133 பேர் உயிரிழப்பு

Updated On :8 செப்டம்பர் 2020, 4:38 am

PTI

புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,133 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 75,809 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,80,422-ஆக அதிகரித்தது.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,133 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 72,775 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 8,83,697 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். நாட்டில் கடந்த திங்கள்கிழமை ஒரே நாளில் 10,98,621 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக 5,06,50,128 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.